Saturday, June 5, 2010

2.ABC resuscitation: ஏபி சி மீளவுயிர்ப்பிக்கும் செயன்முறையின் படிமுறைகள்

2.ABC resuscitation:  ஏபி சி மீளவுயிர்ப்பிக்கும் செயன்முறையின் படிமுறைகள் ABC என்ற ஒழுங்குமுறையில் செய்யப்படும்போது துரிதமாக செயற்படமுடியும்.
சுவாசம், இதய்யத்துடிப்பு நிற்கும்போது ஒருவர் மரணமடைகிறார். அவர் மூளையிறந்துபோவதே மரணம் என இன்றைய மருத்துவ உலகில்  கருதப்படுகிறது.இதயத்துடிப்பு நின்றவுடன் இரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. இரத்த ஓட்டமில்லாமல் மூளை ஏறத்தாழ ஆறு நிமிடங்கள் வரையே தாக்குப்பிடிக்கும். இந்த ஆறுநிமிடங்களுக்குள் செயற்கைச்சுவாசமும்,நெஞ்சுக்கூட்டினை அழுத்தி இதயத்தினை பிசைவதன் மூலம் இரத்த ஓட்டத்தை உடலில் ஏற்படுத்த முடியும்.இதயம் மீண்டும் துடிக்கத்தொடங்கக்கூடும்.இந்தச்செயன்முறை மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
 A-Airway சுவாசப்பாதையை சீர் செய்தல்
 B-Breathing-செயற்கைச்சுவாசம் அளித்தல்
 C- Circulation-இரத்தச்சுற்றோட்டத்தைச்சீராக்கல்
செயன்முறை உடனடியாகவும் முறையாகவும் செய்யப்பட்டால் மூளையைப்பாதுகாத்து உயிரை மீட்கலாம்.
இணையத்தில் எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இந்த செயன்முறை பற்றிய வீடியோக்கள் அனேகம் இருக்கின்றன.
அதில் ஒன்று:
http://www.vidoemo.com/yvideo.php?cpr-training-video-2009-latest-guidelines-first-aid-safetycare-cardiopulmonary-resuscitation-dvd=&i=NXI3aGFWcWuRpZlpYZWs
இந்த அறிவு உயிர்காக்கும்.